Thursday 20 September 2012

Bike Modification India

Buying power of the Indians has increased manifold in the last decade or two, pushing bike manufacturers to launch new products as unprecedented pace. Bike enthusiasts, who have enough currency in their pockets, go for their fancied products, while those who have enough time and patience, but not money, try to get their bikes modified to make them look or perform like models of their choice.

Imitation of Super-bikes
As a matter of fact, most modified bikes are imitations of super-bikes. It is the psyche of every young to draw attention of the people, while riding super-bikes. However, with their price spanning several lakhs, it is not possible for every young to buy them. So they go for another option. They get a cheaper bike modified into a super-bike. Influences from entertainment industry and motor sports also play a role in fuelling the modifying tendency.

Types of Modifications
Bikes could be modified in two ways: Performance wise or Looks wise. You could go for the both too. Looks modification could give you the satisfaction of riding a super bike. However, performance modification in no way guarantees that your bike would not perform like the bike of your dreams.

Modification Kits
Today, modification kits are available for each and every part of bikes. You can get body parts altered or replaced with new moulded ones. If you are creative enough, you could think out your own design and ask companies to execute your ideas on your bike. Most body works are done using fiberglass reinforced plastic which offers one the quality of parts, perfect finish and a glazing surface. Looks-oriented modification kits include clip on handlebars, stylish graphics and stickers, mag-alloy wheels, rear view mirrors, tuned exhaust silencer, specially designed seats etc. You could also get fitted modified mudguards or petrol tanks on your bikes.

Most bike enthusiasts go for common modifications like removing the saree guard, rear view mirrors, changing the handle bar, increasing the size of the rear tyre, using alloy wheels and changing shock absorbers etc. Some go for an entire body alteration while retaining the engine. Some get the sound modified. A diffuser gives the base sound of a Harley Davidson while chambers endow the effect of dirt bikes and race bikes. An exhaust gives the effect of a powerful bike.

Who to Approach
We would advise you to approach any experienced bike modifier rather than a simple mechanic. It is a job to be done by specialists. So you better leave it to a specialist. Do proper consideration before deciding on a modifier.

Effects of Modifications
You must keep in mind that modification does not change a cheaper bike to super bike. It just fakes the physical appearance. So even if you get a bike resemble a highly superior bike, you must be aware of the limitations of the basic model. Performance modifications do increase the efficiency of the bike, to a limited extent. Body modification usually decreases mileage and performance, for the basic engine is not toned to those accoutrements.

Word of Caution
Whenever you go for getting your machine remodeled, its market value decreases. Bike manufacturers too give the warning that even minute alterations on the bike affect its performance.

Bike Modifiers in Delhi
Here is a list of bike modifiers in Delhi. However, you should keep in mind that the list is neither complete nor recommended by us. It is a random list just to help you if that is what you are searching for.
  • Ultimate Bike, 41, Ashoka Park, Main Rohtak Road, Bank of Baroda Building (Rampura), New Delhi-110035
  • Kaulson Overseas Pvt. Ltd., 7/58, South Patel Nagar, New Delhi - 110 001
  • DC Design, Okhla
  • Lalli Singh’s, near the Karol Bagh post office
  • Modvike, Kirti Nagar
  • Saboo Senny Bike Care, Kalkaji
  • Western Fabrications Works, Mayapuri
  • Nanna Motors, Wazirabad

Wednesday 12 September 2012

அம்மையார்குப்பம் கலவரம்: 2 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25, 2001,

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பம் கிராமத்தில் மின் உற்பத்தி தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் திடீரென்று கலவரமாக மாறியதில்இரண்டு பேர் உயிரிழந்தனர்.

கலவரத்தின் போது கூடியிருந்த 2000 க்கும் மேற்பட்டோர் கொண்ட கூட்டத்தைப் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்திக் கலைத்தனர். போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 5 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதுகுறித்துப் போலீஸார் கூறியதாவது:

திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பத்தில் உள்ள மின் உற்பத்தித் தொழிற்சாலைகளில் மின் திருட்டு மற்றும் பல குற்றங்கள் நடக்கிறது என்று மின்உற்பத்தி ஆராய்ச்சிக் குழுவினருக்குப் புகார் வந்தது. இதையடுத்து ஆராய்ச்சிக் குழுவினர் சிலர் அமையார்குப்பத்தில் இயங்கி வரும் மின் உற்பத்தித்தொழிற்சாலைகளைகளில் விசாரணை நடத்த வந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின் உற்பத்தித் தொழிலாளர்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டம் திடீரென்றுகலவரமாக மாறியதில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸ் ஜீப்பைக் கல் வீசித் தாக்கினர். இதில் 4 போலீஸ் ஜீப்புகள் சேதமடைந்தன.

இச்சம்பவத்தில் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் ஒருவர் உள்பட 9 போலீஸார் காயமடைந்தனர்.

மின் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றின் உரிமையாளர் அருணகிரி (45) என்பவர் கூட்டத்தில் சிக்கி மயக்கமடைந்து கீழே விழுந்தார். மயக்கமடைந்தநிலையில் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இதையடுத்து இக்கும்பல் அம்மையார்குப்பத்தில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய அலுவலகம் முன்பு கூடி அலுவலகத்தை தீ வைத்து எரிக்க முயன்றது. இதையடுத்துபோலீஸார் கண்ணீர்புகைக் குண்டு வீசியும், வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டும் கூட்டத்தைக் கலைத்தனர்.

இதில் ரவி (18) என்பவர் காயமடைந்து அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.

அமைதிக் கூட்டம்:

இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபாகர், டிஐஜி ஜாபர், போலீஸ் தலைமைக் கண்காணிப்பாளர் நல்லசாமி ஆகியோர் கலவரம் நடந்தஅமையார் குப்பத்தில் அமைதிக் கூட்டம் நடத்தினர்.

விசாரணைக்கு உத்தரவு:

போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்தவர் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு சனிக்கிழமை இரவு உத்தரவிட்டது.

மேலும் உடனடியாக மாவட்ட போலீஸ் சூப்ரிடென்டன்ட் நல்லசிவத்துக்கு மாற்றல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எம்.பி. மீது தாக்குதல்


அம்மையார்குப்பத்தில் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறச்சென்ற எம்.ஜி.ஆர்.கழக பொதுச் செயலாளர் ஜகத் ரட்கனை ஒரு கும்பல் தாக்கியது. அவர் சென்ற கார் மீது கல்வீச்சுநடந்தது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் அவர் காயமடைந்தார்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற வந்த எம்.பி.யும்,எம்.ஜி.ஆர்.கழகத்தின் பொதுச் செயலாளருமான ஜகத் ரட்சகனைக் கும்பல் ஒன்று தாக்கியது. இதில் அவரது கார்கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

அவர் லேசான காயமடைந்தார் என்றனர்.

முன்னதாக, திருவள்ளூர் மாவட்டத்தில் சனிக்கிழமை மின் உற்பத்தித் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம்கலவரமாக மாறியது. இதையடுத்துப் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஒருவரும், கூட்டஇடிபாடுகளில் சிக்கி ஒருவரும் பலியானார்கள். இச்சம்பவத்தில் 5 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றனர் .

Wednesday 15 February 2012

ஜெனரேட்டர், இன்வெர்ட்டர்கள் விலை அதிகரிப்பு

கடலூர், பிப். 15: மின்சாரத்துக்கான இன்வெர்ட்டர், ஜெனரேட்டர் போன்ற மாற்று சாதனங்கள் விற்பனை மற்றும் விலை, கடந்த 2 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரித்து இருப்பதாக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகவே மின் பற்றாக்குறை உள்ளது. இதனால் நாளொன்றுக்கு ஒருமணி நேரம் இருந்த மின்வெட்டு, இன்று 8 மணி நேரமாக அதிகரித்து விட்டது. மின் வெட்டு நேரம், மின்வாரியம் அறிவித்த நேரங்களைவிட, அறிவிக்கப்படாத மின்வெட்டு நேரம் அதிகம். 

மின்வெட்டால் தொழில் துறையினர், விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் சொல்லொணா துயரம் அனுபவிக்கிறார்கள். மின் பற்றாக்குறையை உணர்ந்துள்ள பொதுமக்கள், மின்தடை நேரங்களை அறிவிப்பதை விடுத்து, எப்போது மின்சாரம் நிச்சயம் கிடைக்கும் என்பதை மின்வாரியம் அறிவித்தால் போதும் என்கிறார்கள். மின்சாரம் நிச்சயம் இருக்கும் நேரத்தை அறிவிக்க முடியாத மின்வாரியத்தால் பயனேதும் இல்லை என்கிறார்கள் பொதுமக்கள். 
கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் 20-க்கும் மேற்பட்ட ரசாயனத் தொழிற்சாலைகள் உள்ளன. இவை ஆண்டுக்கு ரூ. 1,500 கோடிக்குமேல் மருந்துகள் மற்றும் ரசாயனப் பொருள்களை உற்பத்தி செய்கின்றன. இவைகள் மின் வெட்டால் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கிறார் சிப்காட் தொழிற்சாலைகளின் தலைவர் இந்திரகுமார்.புயலுக்குப் பின், ஒரு மாதம் முற்றிலும் மின்சாரம் தடைபட்டது. தற்போது தினமும் பகலில் 2 மணி நேரம் மின்வெட்டு, மற்றும் மாலை 6 முதல் இரவு 10 மணி வரை விளக்குகள் மட்டுமே எரியலாம் என்ற கட்டுப்பாடு உள்ளது
 சிப்காட்டில் பெரும்பாலும் ரசாயனத் தொழிற்சாலைகளாக இருப்பதால் 24 மணி நேரமும் இயங்க வேண்டும். ஒரு நிமிடம்கூட மின்சாரத்தை நிறுத்த முடியாது. இதனால் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 3 கோடி மதிப்பிலான ஜெனரேட்டர்களை பயன்படுத்துகிறோம். மின்வாரியம் வழங்கும் மின்சாரம் யூனிட்டுக்கு ரூ. 5.50 என்றால் ஜெனரேட்டர் மின்சாரம் யூனிட்டுக்கு ரூ. 10 ஆகிறது. இதனால் பொருள்களின் உற்பத்திச் செலவு அதிகரித்து சர்வதேச சந்தையில் பொருள்களை நட்டத்துக்கு விற்க நேரிடுகிறது என்றார் அவர்.
 மின்வெட்டால் கடலூர் மாவட்டத்தில் 13 ஆயிரம் சிறுதொழில் கூடங்கள் நலிவடைவதாக மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்கச் செயலாளர் கு.ராமலிங்கம் தெரிவித்தார்.புதுவை மாநிலத்தில் மின்தடை இல்லாததால், கடலூர் மாவட்ட சிறு தொழிற்சாலகளுக்குக் கிடைத்த ஆர்டர்கள் பல, புதுவைக்குச் சென்று விட்டன. சிறு தொழில்களில் ஜெனரேட்டர்களைக் கொண்டு இயக்கி லாபம் பார்க்க முடியாது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து விட்டனர். உரிமையாளர்கள் வங்கிக் கடன்களை செலுத்த முடியவில்லை என்றார் அவர். மின்வெட்டைச் சமாளிக்க வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இன்வெர்ட்டர் மற்றும் ஜெனரேட்டர்களை பெருமளவில் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். 

மாணவர்களின் படிப்பு தொலைக்காட்சி போன்ற காரணங்களால், வீடுகளுக்கு இன்வெர்ட்டர்கள், ஜெனரேட்டர்கள் அத்தியாவசிய பொருள்கள் பட்டியலில் வந்துவிட்டன. புதிதாக வீடு கட்டுவோர் கட்டுமானச் செலவில் தற்போது இன்வெர்ட்டர் செலவையும் சேர்த்துவிட்டனர்.
 200 வி.ஏ. முதல் 800 வி.ஏ. வரையிலான (பாட்டரியுடன்) இன்வெர்ட்டர்களை வீடுகளில் பயன்படுத்துகிறார்கள். இவற்றின் விலை ரூ. 12 ஆயிரம் முதல் ரூ. 17 ஆயிரம் வரை. டி.வி. உள்ளிட்ட அனைத்து சாதனங்களையும் இயக்கும் வகையில் 1,500 வி.ஏ. திறன் கொண்ட இன்வெட்டர் விலை ரூ. 35 ஆயிரம் வரை. இன்வெட்டர்கள் விலை (பாட்டரியுடன்) கடந்த 2 ஆண்டுகளில் 50 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. பாட்டரிகள் விலை 40 சதம் உயர்ந்து இருக்கிறது.
 வணிக நிறுவனங்களில் 4,000 வாட்ஸ் மின்சாரம் கிடைக்கும் ஜெனரேட்டர்கள் (விலை ரூ. 24 ஆயிரம்) முதல், ஏ.சி. உள்ளிட்ட அனைத்து மின்சாதனங்களையும் இயக்கும் நிறுவனங்கள் (துணிக்கடைகள், நகைக் கடைகள்), அதிசக்தி வாய்ந்த ஜெனரேட்டர்களையும் (விலை ரூ. 5 லட்சம்) பயன்படுத்துகிறார்கள். 
இவற்றுக்கு பெட்ரோல், மண்ணெண்ணெய் அல்லது டீசல் செலவு மற்றும் பராமரிப்புச் செலவுகள் அதிகம். ஒவ்வொரு முறையும் அவற்றை இயக்க வேண்டும். இன்வெர்ட்டர்கள் தானாக இயங்குபவை. பராமரிப்பது எளிது. மின்சாரம் இல்லாதபோது செலவிட்ட அனைத்து சக்தியையும், மின்சாரம் வந்ததும் இன்வெட்டர்கள் இழுக்கத் தொடங்கி விடுகின்றன. இதனால் இன்வெர்ட்டர்களை பயன்படுத்துவோருக்கு மின்கட்டடணச் செலவு அதிகரிக்கும் என்கிறார்கள் மின் பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

Tuesday 14 February 2012

பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு நாளைமுதல் நுழைவுச் சீட்டு

சென்னை, பிப். 14: பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு வியாழக்கிழமைமுதல் நுழைவுச் சீட்டு வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.வியாழக்கிழமை (பிப்ரவரி 16) பிற்பகலிலிருந்து சனிக்கிழமை (பிப்வரி 18) வரை நுழைவுச் சீட்டு விநியோகம் செய்யப்படும்.
மார்ச் 8-ம் தேதி தொடங்க உள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வை 8.2 லட்சம் பேர் எழுத உள்ளனர். இவர்களில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனித் தேர்வர்கள்.இவர்களுக்கான நுழைவுச் சீட்டு விநியோகம் தொடர்பாக, அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண். வசுந்தராதேவி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:தனித்தேர்வர்கள் தங்களின் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தேர்விடத்தின் அடிப்படையில் அருகில் உள்ள தேர்வு மையத்தில்பெயர்பதிவு செய்யப்பட்டுள்ளது. நுழைவுச் சீட்டு வழங்கப்படும் மையங்கள் குறித்த விவரம் அந்தந்த மாவட்டங்களில் பத்திரிகைகள் மூலம் அறிவிக்கப்படும்.தனித்தேர்வர்கள் நுழைவுச் சீட்டைப் பெற்றவுடன், அதில் அச்சிடப்பட்டுள்ள பெயர், பிறந்த தேதி, பதிவு எண், தேர்வு மையம், தேர்வு எழுத பதிவு செய்யப்பட்டுள்ள பாடங்கள், தேர்வு நடைபெற உள்ள நாள் போன்ற விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.இந்த விவரங்களில் ஏதேனும் பிழை இருந்தால், நுழைவுச் சீட்டைப் பெற்றவுடன் கூடுதல் செயலாளர் (மேல்நிலை), அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை- 6 என்ற முகவரியில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ தொடர்புகொள்ளலாம்.
எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு ஆகிய பாடங்களில் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்ணுக்குக் குறைவாகப் பெற்று தேர்ச்சி பெறாதவர்கள், செய்முறைத் தேர்வை மீண்டும் செய்வதோடு, எழுத்துத் தேர்வுக்கும் வருகை புரிய வேண்டும்.முதல்முறையாக மேல்நிலைத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள நேரடித் தனித்தேர்வர்கள் மொழிப்பாடத்தில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வுகளைக் கண்டிப்பாக செய்ய வேண்டும்.மொழிப்பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி (தமிழ்) பாடத்தில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரை பிப்ரவரி 20-க்குள் அணுகி அறிந்துகொள்ள வேண்டும்.
கேட்டல், பேசுதல், செய்முறைத் தேர்வு மையத்துக்குச் செல்லும்போது, விண்ணப்பத்தில் பயன்படுத்திய புகைப்படத்தின் நகலையும் எடுத்துச் செல்ல வேண்டும். 
உரிய நுழைவுச் சீட்டு இன்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார். நுழைவுச் சீட்டு அஞ்சல் மூலம் அனுப்பப்படாது என அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தண். வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

Saturday 4 February 2012

மூத்த மகனுக்கு அரசியல்களம்; இளைய மகனுக்கு சினிமா


சினிமா, அரசியல் என இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டிய தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தனது மகன்களை இரண்டு துறைகளுக்கும் தனித்தனி வாரிசாக களமிறக்க முடிவு செய்துள்ளார்.
மூத்த மகன் அரசியலில் களமிறங்க பயிற்சி பெற்று வரும் நிலையில், இளையமகன் விரைவில் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் செய்யப்படவுள்ளார். சினிமா மூலம் அரசியலுக்கு வந்து, தே.மு.தி.க., என்ற கட்சியை உருவாக்கி குறுகிய காலக்கட்டத்தில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்திற்கு உயர்ந்திருப்பவர் விஜயகாந்த். இவருக்கு விஜய் பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் விஜய் பிரபாகரன், தனியார் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படிப்பை முடித்துள்ளார். இயைமகன் சண்முக பாண்டியன், சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் முதலாண்டு படிக்கிறார். சினிமா, அரசியல், குடும்பம் என மூன்று வேடத்தை கனகச்சிதமாக செய்துவரும் விஜயகாந்த், தனது இரண்டு மகன்களை வாரிசாக களமிறக்க முடிவு செய்துள்ளார்.

மூத்த மகனுக்கு அரசியல் ஆர்வம் அதிகம் இருப்பதால், அவரை அரசியலில் களமிறக்க விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். ஆனால், மற்ற கட்சிகளைப்போல் கொல்லைப் புறம் வழியாக, தனது மகனை அரசியலுக்கு அறிமுகம் செய்ய விஜயகாந்த் விரும்பவில்லை. பல்வேறு அரசியல் பயிற்சிகள் அளித்து, தொண்டர்களுடன் பணியாற்ற வைத்து, குறிப்பிட்ட வயதை கடந்தவுடன், அதன்பிறகே மகனுக்கு கட்சி பதவி வழங்க விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் சரளமாக பேசக்கூடிய விஜய் பிரபாகர், தற்போது, சென்னையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பிரெஞ்ச் மொழி கற்றுவருகிறார். மேலும், அரசியலில் களமிறங்குவதற்கு வசதியாக, விஜயகாந்திற்கு நெருக்கமான ஒய்வுபெற்ற ஐ.ஏ. எஸ்., அதிகாரி ஒருவர் மூலம் நிதி நிர்வாகம், பொது மக்கள் மேலாண்மை, அரசியல் வரலாறு உள்ளிட்ட கல்வியையும் கற்று வருகிறார். தமிழக அரசியலுக்கு இதுபோன்ற அரசியல் பயிற்சிகள் தேவை இல்லை என்றாலும், வரும் காலத்தில் டில்லி அரசியலுக்கு தேவைப்படலாம் என்பதால், அதற்கேற்ப பயிற்சிகளை விஜயகாந்த் ஏற்பாட்டில் கற்றுத்தரப்படுகிறது.

இளையமகன் சண்முகபாண்டியன், தந்தையைப் போல சினிமாவில் கதாநாயகனாக நடித்து, பிரபலம் அடைய வேண்டும் என்று விரும்புகிறார். அவரது ஆசைப்படியே, சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் செய்வதற்கான பணிகளை விஜயகாந்த் துவக்கியுள்ளார். இதற்காக நடிப்பு, நடனம், சண்டை, உடற்பயிற்சி ஆகியவற்றில் சண்முக பாண்டியன் ஈடுபட்டு வருகிறார். இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப, இளைய தலைமுறையினர் விரும்பும் வகையில் படம் இருக்க வேண்டும் என்பதால், பல கதைகளை கேட்டு, மூத்த மகன் விஜய் பிரபாகர் ஆலோசனைப்படி நான்கு கதைகளை இறுதியாக விஜயகாந்த் தேர்வு செய்துள்ளார். இதில் ஒரு கதை இறுதி செய்யப்பட்டு, விரைவில் விஜயகாந்த் மகன் கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது.

- எஸ்.அசோக்குமார் -

Tuesday 31 January 2012

நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்


சென்னை, ஜன. 31: குணச்சித்திர நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் (72) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் திங்கள்கிழமை காலமானார்.
 சென்னை நந்தனம் பகுதியில் குடும்பத்தாருடன் வசித்து வந்த இடிச்சபுளி செல்வராஜ் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் திங்கள்கிழமை காலை அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
 எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், கே.பாக்யராஜ், அஜித் உள்பட பலருடன் சுமார் 120-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர, நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார் இடிச்சபுளி செல்வராஜ்.
 எம்.ஜி.ஆரின் "இதயக்கனி', "உலகம் சுற்றும் வாலிபன்' உள்ளிட்ட சில படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
 மறைந்த இடிச்சபுளி செல்வராஜின் இறுதிச் சடங்கு திங்கள்கிழமை நடைபெற்றது. அவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், வசந்தி என்ற மகளும் உள்ளனர்.

Wednesday 4 January 2012

அனைவருக்கும் வி.ஏ.ஓ. பணி


சென்னை, ஜன.4: கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் பணி நியமன ஆணையை அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்புதல் என்ற பெயரில், இடஒதுக்கீட்டு சதவீதத்தை விட கூடுதலான இடங்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்த கே. ராதா உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.  இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதி கே. சுகுணா பிறப்பித்த உத்தரவு:  கிராமப்புற வளர்ச்சிப் பணிகளுக்கு கிராம நிர்வாக அலுவலர்களின் பணி என்பது மிகவும் முக்கியமானதாகும். இந்நிலையில், காலியாக உள்ள வி.ஏ.ஓ. பணியிடங்களை நிரப்பிட தேர்வு நடத்தப்பட்டு, பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டது.  எனவே, வி.ஏ.ஓ. பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் பணி நியமண ஆணையை நான்கு வாரத்துக்குள் அனுப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இட ஒதுக்கீட்டு அளவுக்கு மேல் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா என்பது பற்றி இந்த வழக்கின் இறுதி விசாரணையின்போது ஆராய்ந்து, முடிவு செய்து கொள்ளலாம். ஒருவேளை கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தாலும் கூட, எதிர்காலத்தில் வி.ஏ.ஓ. தேர்வு நடைபெறும்போது அதனை சரி செய்து கொள்ளலாம் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.  மனுதாரர்கள் தாக்கல் செய்துள்ள மனுக்களில், கடந்த 2007 - 2008-ம் ஆண்டில் 2,500 வி.ஏ.ஓ.க்கள் பணியில் நியமிக்கப்பட்டனர். அதன் பின்னர் பின்னடைவு காலிப் பணியிடங்கள் என்ற அடிப்படையில் 197 இடங்கள் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டியிருந்தது.  இந்நிலையில், கடந்த 21.7.2010 அன்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிக்கையில் 1,077 வி.ஏ.ஓ. பணியிடங்கள் பின்னடைவு இடங்கள் என்ற அடிப்படையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீடு சட்ட விரோதமானதாகும். எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கோரியிருந்தனர்.  இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், தாழ்த்தப்பட்டோருக்கு 18 சதவீதம் மற்றும் பழங்குடியினருக்கு 1 சதவீதம் இடஒதுக்கீடு என்ற அடிப்படையில், இன்னும் 1,232 இடங்களில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டியுள்ளது என்று கூறியிருந்தார்.  எனினும், மனுதாரர்கள் தரப்பு வழக்குரைஞர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அரசு தலைமை வழக்குரைஞர் தவறான புள்ளி விவரங்களை அளித்துள்ளதாக கூறினார்கள்.  அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டவர்களுக்குப் பணி நியமன ஆணை அனுப்பப்பட வேண்டும் என்றும், வழக்கின் இறுதி விசாரணை பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெறும் என்றும் உத்தரவிட்டார்.
கருத்துகள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *
மேற்காணும் எண்ணை பதிவு செய்க *

குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்கு பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

உத்தரகோசமங்கை கோயிலில் ஆருத்ரா தரிசனம்

கீழக்கரை : ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் மரகத நடராஜர் ஆருத்ரா தரிசனம் ஜன.,7ல் நடக்கிறது. உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழா டிச.,30ல் துவங்கியது. ஜன.,7ம் தேதி காலை 10.30 மணிக்கு சந்தனம் களைதல், காலை 11 மணிக்கு மகா அபிஷேகம், மதியம் 12 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. இரவு 10 மணிக்கு மேல் மூலவர் மரகத கல்லால் ஆன நடராஜர் சுவாமிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் துவங்குகிறது.

அடுத்த நாள்(ஜன.,8) அதிகாலை 4 மணிக்கு நடராஜருக்கு சந்தனம் சாற்றுதல், அதன் பின் தீபராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் மகேந்திரன் தலைமையில் நிர்வாக அலுவலர் சாமிநாதன் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

விழாவை காண தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவதால் ராமநாதபுரம், பரமக்குடி உட்பட பல பகுதிகளில் இருந்து உத்தரகோசமங்கைக்கு சிறப்பு பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

காத்தருள்வாய் ரங்கநாதா...

வைகுண்ட ஏகாதசியான இன்று ஸ்ரீரங்கநாதரை வணங்குவதற்குரிய ஸ்தோத்திரத்தைப் படியுங்கள்.

காவிரியின் நடுவில் ஏழு திருமதில்களால் சூழப்பட்ட ஸ்ரீரங்கநாதனே! தாமரை மொட்டு போன்ற விமானத்தில் குடிகொண்டவனே! ஆதிசேஷன் என்னும் கட்டிலில் துயில்பவனே! யோகநித்திரையில் அனைத்தையும் அறிந்தும் அறியாதது போல இருப்பவனே! இடது கையை இடுப்பில் வைத்திருப்பவனே! ஸ்ரீதேவியும் பூதேவியும் வருடுகின்ற திருப்பாதங்களைக் கொண்டவனே! ஸ்ரீரங்கநாதா! உன்னைப் போற்றுகிறேன்.

கஸ்தூரி திலகமிட்ட நெற்றி கொண்டவனே! காது வரை நீண்டிருக்கும் அகன்ற கண்களைப் பெற்றவனே! முத்துக்கள் இழைத்த கிரீடம் அணிந்தவனே! பக்தர்களின் மனதை அபகரிக்கும் தேக காந்தி கொண்டவனே! தாமரைமலருக்கு ஈடான அழகுமிக்கவனே! ஸ்ரீரங்கநாதா! உன்னைக் காணும் பாக்கியம் எப்போது எனக்கு கிடைக்கும்!

மது என்னும் அரக்கனைக் கொன்றவனே! நாராயண மூர்த்தியே! முரனை வென்ற முராரியே! கோவிந்தராஜனே! உன் திருநாமங்களை உரக்கச் சொல்லி வாழ்நாளை எல்லாம் ஒரு நிமிஷம்போல கழிக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்குமா? காவிரிக்கரையோரம் வாழ்பவனே! இந்திர நீலமணி போன்ற பேரழகுடன் ஆதிசேஷ சயனத்தில் படுத்திருப்பவனே! உன் அருகில் வாழும் பாக்கியத்தை தந்தருள வேண்டும்.

பெருமானே! புனிதமான காவிரியில் நீராடும் பாக்கியம் எனக்கு வேண்டும். அடர்ந்த பசுமரங்கள் நிறைந்த அழகுமிக்க காவிரி நதிதீரத்தில் நான் வசிக்கும் பேறு பெற வேண்டும். மங்கலம் நிறைந்தவனே! தாமரை மலர் போன்ற கண்களைப் பெற்றவனே! உன்னை பக்தியோடு வணங்கும் பாக்கியத்தை அருள்புரிவாயாக.

ரங்கநாதனே! பாக்கு மரங்கள் நிறைந்ததும், தெளிந்த நீரால் நிரம்பியதும், வேதகோஷத்தால் சூழப்பட்டதும், கிளி, குருவி போன்ற பறவைகள் ஒலியெழுப்புவதும், தரிசித்தவர்க்கு வைகுண்டம் தந்தருளி மோட்சத்தைக் காட்டுவதுமான லட்சுமிகடாட்சம் நிறைந்த ஸ்ரீரங்கத்தை தரிசிக்கும் பாக்கியம் எனக்கு என்று கிடைக்குமோ?

எம்பெருமானே! தேவலோக நந்தவனத்தில் அமிர்தம் அருந்தும் பாக்கியம் எனக்கு வேண்டாம். தேவர்களில் ஒருவராகவும் நான் மாற வேண்டாம். ஸ்ரீரங்கத்தில் ஒரு நாயாக வாழும் பாக்கியத்தைக் கொடுத்தால் போதும்.

அம்மா! எனக்கு மிகவும் பசிக்கிறது. உடல் நடுங்குகிறது,' என்று சொல்லும் குழந்தையிடம் தாய் எப்படி பாசத்தோடு ஓடி வந்து அணைத்து ஆகாரம் தருவாளோ அதுபோல...ரங்கநாதா! என் துயரத்தைப் போக்க வந்தருள்வாயாக.

இன்று சொர்க்கவாசல் திறப்பு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியானபரமபதம் என்றழைக்கப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று நடக்கிறது. முன்னதாக பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் கடந்த மாதம் 25-ம் தேதி ஏகாதசி விழா துவங்கியது. அதுமுதல் தினமும் ஒரு அலங்காரத்தி்ல பக்தர்களுக்கு நம்பெருமாள் அருள் பாலித்து வந்தார்.
இதனையடுத்து முக்கிய நிகழ்ச்சியான இன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்‌சி நடைபெறுகிறது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு ரத்தின அங்கி , பாண்டினயன் கொண்டை, கிளிமாலை உட்பட பல்வேறு நகைகள் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு நாழிகேட்டான் வாசல்வழி‌யே ‌சென்று கொடிமரத்தை சுற்றிவந்து துரைப்பிரகாரம் வழியாக சொர்க்கவாசல் வந்து சேர்கிறார்.