Wednesday 4 January 2012

உத்தரகோசமங்கை கோயிலில் ஆருத்ரா தரிசனம்

கீழக்கரை : ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் மரகத நடராஜர் ஆருத்ரா தரிசனம் ஜன.,7ல் நடக்கிறது. உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழா டிச.,30ல் துவங்கியது. ஜன.,7ம் தேதி காலை 10.30 மணிக்கு சந்தனம் களைதல், காலை 11 மணிக்கு மகா அபிஷேகம், மதியம் 12 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. இரவு 10 மணிக்கு மேல் மூலவர் மரகத கல்லால் ஆன நடராஜர் சுவாமிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் துவங்குகிறது.

அடுத்த நாள்(ஜன.,8) அதிகாலை 4 மணிக்கு நடராஜருக்கு சந்தனம் சாற்றுதல், அதன் பின் தீபராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் மகேந்திரன் தலைமையில் நிர்வாக அலுவலர் சாமிநாதன் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

விழாவை காண தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவதால் ராமநாதபுரம், பரமக்குடி உட்பட பல பகுதிகளில் இருந்து உத்தரகோசமங்கைக்கு சிறப்பு பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

No comments:

Post a Comment