Monday, 2 January 2012

வடாரண்யேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

திருவள்ளூர் : திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனம் வரும் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறவுள்ளது.
திருவள்ளூர் அடுத்த, திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில், சிவபெருமான் நடமாடிய திருச்சபைகளில் முதல் சபையாகும். ரத்தின சபை என்றழைக்கப்படும் இத்திருத்தலம், காரைக்கால் அம்மையார் தலையால் நடந்து வந்து, சிவபெருமானின் நடனத்தை கண்டு ரசித்த தலமாகும்.
இங்கு ஆண்டுதோறும், மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜருக்கு நடைபெறும் அபிஷேகம் ஆருத்ரா தரிசனம் என்றழைக்கப்படுகிறது.
"சிவபெருமான் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார் என்பதால், அந்த நட்சத்திரத்தில் இங்கு அபிஷேகம் நடைபெறுகிறது.
இந்தாண்டு ஆருத்ரா தரிசனம், வரும் ஜனவரி, 8ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம், இரவு 9 மணியளவில், ரத்தின சபாபதி பெருமான் ஸ்தல விருட்சத்தின் கீழ் புதிதாக நிர்மாணித்துள்ள ஆருத்ரா அபிஷேக மண்டபத்திற்கு எழுந்தருள்வார். இரவு 9.30 மணியளவில் அபிஷேகம் ஆரம்பித்து விடியற்காலை 4 மணி வரை சிறப்பாக நடைபெறும்.
அதன் பின், அலங்காரம் செய்து, அதிகாலை 9ம் தேதி 5 மணியளவில் தீபாராதனை நடைபெற்று, ஆலமர பிரகாரம் வலம் வந்து கோபுர தரிசனம் நடைபெறும். பகல் 1 மணியளவில் அனுக்கிர தரிசனமும், மறுநாள் 10ம் தேதி, காலை 8.45 மணிக்கு சாந்தி அபிஷேகம் நடைபெறும்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவர் என்பதால், அதற்கான ஏற்பாடுகளை, திருத்தணி முருகன் கோவில் இணை ஆணையர் தனபால் மற்றும் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.

 http://www.dinamalar.com/district_detail.asp?id=378212

No comments:

Post a Comment