Saturday 31 December 2011

சுற்றுலா அலுவலர் பணி: பதிவுதாரர்களுக்கு அழைப்பு


கரூர்: "சென்னை சுற்றுலாத்துறை ஆணையரால் அறிவிக்கப்பட்டுள்ள உதவி சுற்றுலா அலுவலர் நிலை-2 பணி காலியிடம் தொடர்பாக மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்' என கரூர் வேலை வாய்ப்பு அலுவலர் மணி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இளங்கலை சுற்றுலா படிப்பு அல்லது ஏதாவது இளங்கலை பட்ட படிப்புடன் சுற்றுலா பட்டய படிப்பு ஆகிய கல்வி தகுதியை கொண்டு பழங்குடியினர் (20.7.2010) ஆதிதிராவிடர் (18.7.1995) மிகவும் பிற்பட்ட வகுப்பினர் (21.4.1997) பிற்பட்ட வகுப்பினர் (12.7.1991) பொதுப்போட்டி (26.7.1994) ஆகிய மூப்புக்கு உட்பட்ட பதிவுதாரர்கள் வரும் 2ம் தேதிக்குள் கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு அனைத்து அசல் சான்றுகளுடன் வந்து தங்களது பதிவை சரிபார்த்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment