Sunday 18 December 2011

தனித்தேர்வர்கள் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

தஞ்சாவூர்: மார்ச் 2012ல் நடக்கும் மேல்நிலை தேர்வுக்கு தனித்தேர்வர்கள் 20ம் தேதிக்குள் (நாளை) விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கூடுதலாக வழங்கப்படும் குறியீட்டு படிவத்தில் குண்டூசி மற்றும் "ஸ்டராப்லர்-பின்' பயன்படுத்தாமல் "ஜெம் கிளப்' மட்டும் பயன்படுத்துமாறு தனித்தேர்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

குறியீட்டு படிவத்தில் ஒட்டப்படும் போட்டோவில் சான்றொப்பம் ஏதும் பெறக்கூடாது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை டிச., 20ம் தேதி  மாலை 5 மணிக்குள் தேர்வர்கள் தேர்ந்தெடுக்கும் மையத்தைச் சார்ந்த சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நேரில் சமர்பிக்க வேண்டும்.

20ம் தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பப்படிவங்கள் ஏற்கப்படாது. விண்ணப்பப்படிவம் மற்றும் குறியீட்டு படிவத்தை மடிக்காமல் நேரடியாக கொடுக்க வேண்டும். கூரியர், பதிவுத்தபால், விரைவுத்தபால் மூலம் மடித்து அனுப்பப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

No comments:

Post a Comment