சென்னை, டிச. 19: சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் புதன்கிழமை (டிசம்பர் 21) சிறப்பு யாகம்
நடைபெறுகிறது.
வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில் உள்ள கீழ்ப்புதுப்பேட்டையில் ஞானகுரு ஸ்ரீ
முரளிதர சுவாமிகளின் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம், சனிப்பெயர்ச்சிக்காக கடந்த 5
ஆண்டுகளாக சிறப்பு யாகங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 6வது
முறையாக, சனிப்பெயர்ச்சி நாளான டிசம்பர் 21-ம் தேதி மகா யாகத்தையும் மகா ஜோதிட
மேளாவையும் நடத்துகிறது.
No comments:
Post a Comment